Friday, August 17, 2007

Hi...

hi all..
Am back after a long gap..................

Avaravar vazhkaiyil aayiram aayiram matrangal !!

Meendum sandhipom..
Jb

Thursday, November 17, 2005

Will be back !

I would be joining another company soon and would be taking a break in between. Will meet you all after couple of weeks !! Will try n blog sometime though i would be busy oor suthifying and meeting friends :) ....

Till then bye from me...and keep blogging :)

Friday, November 11, 2005

கதை கதையாம்...!

அன்று விடிந்ததிலிருந்து சாம்பசிவத்திற்கு கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை....கடிகாரத்தை பார்ப்பதுமாகவும் உள்ளும் வெளியும் நடப்பதுமாகவே இருந்தார்..

தன் ஒரே செல்ல மகள் ப்ரியா-வை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்றதும் காலையிலிருந்து எல்லா பெற்றோர்க்கும் இருக்கும் பதட்டமும் படபடப்பும் அவரிடம் சற்று அதிகமாகவே இருந்தது......

காரணம் அவர் ப்ரியா-வை என்றும் பிரிந்தது இல்லை....ஒரே மகள் என்பதாலோ என்னவோ...அவளை மிகவும் செல்லமாகவும், அன்பாகவும் வளர்த்தார்...! ப்ரியாவும் தன் பெற்றோர் மீது பரிவையும் பாசத்தையும் வைத்திருந்தாள்....

எல்லாவற்றிற்கும் தன்னைச் சுற்றி சுற்றி வந்த பெண்ணா இன்று திருமனத்திற்கு தயாராகி நிற்கிறாள் என்பதை அவரால் சற்று நம்பத்தான் முடியவில்லை..!!!!

'மீனாட்சி....மீனாட்சி...டிபன் எல்லாம் ரெடி தான?...எப்பவும் போடற மாதிரி உப்பு அதிகம் போட்டுடாத....காபி டிகாக்ஷன் போட்டு வச்சிட்டல? மாப்பிள்ளை வீட்டுகாரங்க வர்ர நேரம் ஆச்சு பாரு..''

'அடடா....என்னங்க நீங்க....இதையே எத்தனை வாட்டி சொல்லுவீங்க...?? எல்லாம் ரெடியா இருக்கு...வேனும்னா உள்ள வந்து பாருங்களேன்....' சிறு பிள்ளை போல கவலைப் படும் தன் கனவனைப் பார்த்து சிரித்தபடி கூறினாள்...மனி மூனு-தான் ஆகுது...அவங்க நாலு மனிக்கு மேல வரதாதான் தரகர் சொன்னாரு.....நீங்க கொஞ்ச நேரம் இப்படி ஒக்காருங்க....

'மீனாட்சி..எனக்கு என்னமோ இந்த எடம் நம்ம பொன்னுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்னு தோனுது.....பய்யன் பீ.இ படிச்சிருக்கான்...பெங்கள்லூர்ல இருக்கற ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பேனில ப்ராஜ்ஜெக்ட் லீட்-ஆ இருக்கான்....மாசம் சொலையா நாப்பது ஆயிரம் சம்பாதிக்கறான்...

'ஆமாங்க....நானும் அப்படித்தான் நெனைக்கறேன்....உங்க ப்ரெண்டு நாராயணன் கூட சொன்னாரே...பய்யன் ரொம்ப நல்ல பய்யன்...ஒரு கெட்டப் பழக்கம் கெடையாது...சிகரெட்,மது இதெல்லாம் மருந்துக்கு கூட தொட மாட்டான் !! நல்லா பழகுவான்...பெரியவங்களுக்கு ரொம்ப மரியாதை கொடுப்பான் அப்படீனு...இந்த எடம் அமஞ்சா நம்ம ப்ரியா ரொம்ப சந்தோஷமா இருப்பா...

'ம்ம்ம்..நான் கூட பய்யன பத்தி விசாரிச்சிட்டேன்...நல்ல குடும்பம்..போட்டோ-வும் ரென்டு பேரும் பாத்தாச்சு...ரென்டு பேருக்கும் ஓகே...நேர்ல ஒரு தடவ பார்த்து பேசியாச்சுனா...எல்லாம் நல்லபடியா..முடிஞ்சிடும்....இன்னும் ரென்டு மாசத்துல நல்ல முகூர்த்தம் கூட இருக்கு...

தன் அறையில் இருந்தபடி இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா, மனதிற்குள் நெகிழ்ந்து கொன்டாள்...எல்லா பெண்களுக்கும் உள்ள ஆசையும் கனவும் அவளுக்கும் இருந்தது...ஒரு நல்லவன் தனக்குக் கனவனாக வரப்போவதை எண்ணி மகிழ்ந்தாள்...!!

(சில நாட்களுக்குப் பிறகு........)

அனைவரின் விருப்பபடி ப்ரியா ப்ரதீப் திருமனம் இனிதே நடைபெற்று முடிந்தது...!!

பிரியா விடை பெற்ற ப்ரியா..கனவனின் இல்லத்தில் தொடங்க போகும் இனிய வாழ்வினை வரவேற்க தயாரானாள்......

வந்த விருந்தினர் ஒவ்வொருவராக விடை பெற.....ப்ரியா தன் கனவனிடம் தனிமையில் மனம் விட்டுப் பேச காத்திருந்த அந்த சில நிமிடங்களில் தன் செல் போன் சினுங்க, எடுத்து பேசினாள்.......திருமனத்திற்கு வர முடியத சிலர் அவளுக்கு போனில் வாழ்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்...

உள் அறை வெராண்டாவில் பேசி முடித்து அறைக்குள் நுழைந்தபோது சில மனித் துளிகளை கடிகாரம் விழுங்கி இருந்தது.....

சற்று தொலைவில் ப்ரதீப் தன்னை வெறித்து பார்த்து கொண்டிருப்பதை கண்டு அவனை ஆசையுடன் அள்ளி அனைக்க ஒடினாள்....

'நில்லுடி.....யாரோட இவ்வளவு நேரம் கொஞ்சி கொலாவிட்டு வர்ர??????

இடியென அதிர்ந்து நின்றாள் ப்ரியா.....

தன் பெற்றோர் கண்ட கனவு ப்ரதீப் வடிவில் கலைவதைக் கண்முன் கண்டாள்...

தன் வாழ்க்கை ஒரு சந்தேக புயலில் சிக்கிச் சிதறுவதை நினைத்து அதிர்ந்தாள்...!!!!!!

-கண்னால் காண்பதும் பொய் !-
காதால் கேட்பதும் பொய் !-
தீர விசாரிப்பதும் பொய் !!!! - என்னும் முடிவுக்கு வந்தாள்...

Top 9 Funniest Newspaper Classifieds !!

These are actual excerpts from classifieds sections of city newspapers ! Read n Njoy :)

1. Illiterate? Write today for free help.
(man....if only I knew A B C....)
2. Auto Repair Service. Free pick-up and delivery. Try us once; you'll never go anywhere again.
(sure...thanx for the warning!)
3. 3-year old teacher needed for pre-school. Experience preferred.
(in months or years?)
4. Used Cars: Why go elsewhere to be cheated. Come here first.
(check it out)
5. Dog for sale: eats anything and is fond of children.
(howwww sweeeet)
6. Man wanted to work in dynamite factory. Must be willing to travel.
(wow! A free trip to heaven?)
7. Tired of cleaning yourself. Let me do it.
(uh...huh!)
8. Wanted. Man to take care of cow that does not smoke or drink.
(hey....who taught cows the bad habit??)
9. We do not tear your clothing with machinery. We do it carefully by hand.
(nice work!)

Thursday, November 10, 2005

குங்குமம் - இந்த வாரம்...!!!!!

SUN T.V la varum famous kungumam advt. tone-la padinga..... ;-)

குங்குமம்....இந்த வாரம்...!!!!!

இந்த முறை சான்ஸ் கொடுத்தால் கண்டிப்பாக ஒரு ரன்னாவது அடிப்பேன்......................கங்குலி கதறல் !!!!!!!!!!!!

பணம் கொடுத்து என் படங்களை ஓட்டினேனா???..................விஜய் அழுகை !!!!!!!!!!!!

கெழவி-யா இருந்தாலும் Kiss அடிக்காமல் விட மாட்டேன் -
கமல் கிலு கிலு பேட்டி....

மற்றும் இந்த இதழுடன்....இரண்டு டாக்டர் ஸீட்டு இலவசம்....

குங்குமம்...பார்க்க படிக்க ...வேஸ்ட்டு கண்ணா வேஸ்ட்டு !!!!!!!!

Wednesday, November 09, 2005

கவிதை to கதை !

hmm...thought of writing something about rain....started to write some poetic verse..but then it ended up as a story...my first attempt....!!!! so just blogged it :) and also my first post typed in tamil ! :)

அது ஒரு மழைக் காலம்..
அழகான குளிர்க் காலம்…

மேகத்துடன் இடியின் யுத்தம்..
மழை நீர் விழும் சத்தம்…

சென்னை எங்கும் விடுமுறை...
மனம் விரும்பியது மழையை மறுமுறை..

சுவையான குழி பனியாரம்..
சுட சுட காபி..

ஜன்னல் ஒரம் நான்…

மழையை ரசித்தபடி
உணவை ருசித்தபடி…


*(*(*(** இதுக்கு மேல யோசிக்க முடியல..** இதையே ஒரு கதையா Convert பண்ணா என்ன !??!?! Let me Try ;-)


சோம்பல் முறித்து படுக்கையில் இருந்து எழுந்தாள் ப்ரியா…!

அன்றைய அலுவலக பணிகளை மனதில் எண்ணிய படி கடிகாரத்தை பார்த்தாள்...மனி 7-ஐ தாண்டி இருந்தது…

திங்கட் கிழமை காலை அவளை இடி, மழை, மின்னலுடன் வரவேற்றது !!! படுக்கையிலிருந்து துள்ளி குதித்தாள் ப்ரியா..

அடாடா….சம மழை பேயுதே...…`அம்மா….அம்மா' என்றபடி சமையல் அறையை நோக்கி சென்றாள்..


'என்னடி?' ஏன் இப்படி உயிர் போகற மாதிரி கத்தற ??

'Night fulla மழைய மா ??' Brush-இல் paste போட்டபடி கேட்டாள் ப்ரியா..


'ஆமாம்..கரண்ட் வேற நடுல நடுல போயிட்டே இருந்துது..' இதெல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது…நீ தூங்கினா இடியே விழுந்தாலும் எழுந்துக்க மாட்ட..


'அதுகெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும் மா…தூக்கம் எல்லாருக்கும் வந்துடாது….சரி சரி சுப்பரா சூடா ஒரு காபி கொடு…
'ம்ம்ம்..இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல உனக்கு..நாளைக்கு மாமியார் வீட்டுக்கு போயி பட்டாதான் உனக்கு தெரியும்…

'ஏன் மா எப்ப பார்த்தாலும் பொலம்பற? …அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…
சரி இன்னைக்கு என்ன டிபன் !? மழைக்கு ஏத்த மாதிரி சூடா எதாவது செய்யி….குழி பனியாரம் இருந்தா பெட்டெர் !


சரி சரி..நீ office-க்கு போன் பண்ணி leave சொல்லிடு….தெரு முக்குல தண்ணி ரொம்ப நிக்குதாம்..நம்ம பால்காரி சொன்னா..…உன்னால போக முடியாது…


'அடடா….சூப்பர்….மழை இப்படி பேயனும்…Office போக முடியாத படி…

இப்பவே நான் என்னோட Manager-க்கு போன் பண்ணி Leave சொல்லிடறேன்'


mm…இந்த மழை வந்தாலே ஜாலிதான்…தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிருபேன்…!!


office போக வேண்டிய தொல்லை இல்ல…அந்த லூசு manager-um இன்னைக்கு வராதாம்….அம்மாவிடம் சொல்லிக் கொன்டிருந்தாள் ப்ரியா..


சரி மா…நான் பால்கனி-ல ஒக்காந்து என்னோட சிட்னி ஷெல்டன் புக்-ஒட செட்டில் ஆக போறேன்..என்ன டிச்டர்ப் பன்னாத..


எதையாவது பண்ணு….11:30 க்கு அகல்யா சீரியல் ஆரம்மிச்சிடும்….அதுக்கு முன்னாடி சாப்ட வா…! கரண்ட் வேற போற மாதிரி இருக்கு..


இல்ல மா…எனக்கு இப்ப சாப்பாடு வேண்டாம்…இன்னொரு கப் சூப்பரா ஒரு காபி கொடு..நான் மத்தியானமா சாப்பிடறேன்..

என்ன இருந்தாலும் இந்த மழைல காபி குடிக்கற மாதிரி வருமா?…
ஓரு கையால் காபி சுவைக்க…இன்னொரு கையில் சிட்னி ஷெல்டன் இருக்க…ப்ரியா-வுக்கு நேரம் போனதே தெரியவில்லை..


'அக்கா…அக்கா…' என்றது ஒரு குரல் திடீரென்று…

'யாரது இந்த நேரத்துல ?!'…'அம்ம்ம்ம்மா''' யாருனு பாரேன்..


'நான் உள்ள வேலையா இருக்கேன்..நீ போயி பாரு'..


'ம்ம்….ச…கொஞ்ச நேரம் நிம்மதியா ஒக்கார விட மாடீங்களே'……….முணுமுணுத்தபடி கதவைத் திறந்தாள் ப்ரியா..

'யாரு வேணும் மா' ?

ஆழுக்கு உடையுடன்….சொட்டச் சொட்ட நனைந்த படி இடுப்பில் ஒரு கை குழந்தையுடன் ஒரு 10 வயது சிறுமி…நின்றிருந்தாள்....

' என்னமா…?? என்ன வேணும் ?!

அக்கா…நாங்க இந்த தெரு முனைல இருக்கற குடிசையில இருகோம்…மழை வந்து எங்க மண் குடிசை இடிஞ்சி விழுந்துடுச்சு….அம்மாக்கு அடிப் பட்டு ஆச்பத்ரி போயிருக்காங்க..


'பணமெல்லாம் இல்லமா….அப்பறம் வா..' என்றாள் ப்ரியா..
'அக்கா…எனக்கு பணம் வேண்டாம், சோறும் வேண்டாம்…எங்க வீட்டு விறகு அடுப்பு மழைல நனஞ்சி போயி எரியல…


கூரை இல்லாததால எதூவுமே செய்ய முடியல…கொஞ்சம் சுடு தண்ணீர் கொடுத்தீங்கனா….என்னோட தம்பிக்கு கொடுப்பேன்…அவனுக்கு குளிர் தாங்காது…என்றாள் தன் இடுப்பில் இருந்த குழந்தையைக் காட்டிய படி..!!


அந்த சின்னஞ்சிறு பெண்ணின் கண்களில் ஏக்கம்….

தண்ணீர் தருவார்களா என்ற பதட்டம்…

தம்பிக்கு எதுவும் ஆகக் கூடாதே என்ற நடுக்கம்…

'ப்ரியா கண்களின் ஒரம் நீர்….முதல் முறையாக மழை நிற்க வேண்டும் என்று ப்ரியா மனதார வேண்டினாள்….


அவள் கையில் இருந்த காபி அவள் கண்ணீர் சிந்தி உப்பு கரித்தது..!!!!

Tuesday, November 08, 2005

Depressing Thought for the day !

Is there life before Death ?!

yaarum tension aayidadheenga :) konjam bore adichidhu adhaan indha edakku madakku kelvi :D

Wednesday, November 02, 2005

Give me a break !!!!!

The day is goin to end finally.....but i have strained my eyes a lot today...staring too much @ the computer..!! :( and WORKING !!

While thinking about the eyes.....thought i wud take a good break by writing something nice about EYES...and ended up writing this

Wrote this in just 2 minutes...!
and YES ! It was quicker than the time Ganguly stays on the pitch ;-)

:(

My Computer's mouse ran over the delete link of my previous post by mistake..It was a freaky accident and my previous post died bcoz of that !!

Hearty condolences to my 'Dark stormy Night - Part I' post :(( !!!!